இடுகைகள்

உயிரற்ற உயிர்கள் (நடுநிசி எல்லைகள்)

படம்
      இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது வடக்கே நிகழ்ந்த வன்கொடுமைகளை அபுனைவாகவும் புனைவாகவும் வாசித்துள்ளேன். காஷ்மீர் பகுதியில் தாக்குதல் குறித்தும் அவ்வபொழுது பார்ப்பதும் படிப்பதும் உண்டு. இந்திய நிலப்பரப்பின் தன்மையை, மக்களின் பண்பாட்டை உணர்வுகளைப் பற்றி எதுவும் அறியாதவர்களால் உருவாக்கப்பட்ட எல்லைகளில் வாழும் மக்களின் துயரார்ந்த வாழ்நிலையை அம்மக்களின் நம்பிக்கையைப் பெற்று, அவர்களின் அடிப்படை வாழ்வில் சிக்கல்களுக்கான சட்டப்பூர்வமாக விளக்கங்களை அளித்து நேசத்தோடு உடன் பயணித்து அவர்களின் கதையை அவர்களின் குரலாகவே ஒலிக்கச் செய்துள்ளார் சுசித்ரா விஜயன். இதற்காக இந்திய எல்லை 9000 மைல் 2013 இலிருந்து கிட்டத்தட் எட்டு ஆண்டுகள் பயணித்துள்ளார். பயணத்தின் ஊடாக அவர் கேட்டக் கதைகள் இந்தியாவைப் பற்றி அண்மை காலத்தில் கட்டியெழுப்படுகின்ற கருத்தாக்கத்தை அசைக்கின்றன. 200 ஆண்டுகால காலனிய ஆதிக்கத்தின் துயரத்தைவிட சுதந்திரம் கிடைத்து எல்லைகள் பிரிக்கப்பட்ட பிறகு எல்லையோர மக்களின் அடிப்படை வாழ்வாதரமே திக்குத்தெரியாமல் இருண்டதாக மாறுகிறது. அவர்களின் மனங்களில் மண்டிக்கிடக்கும் கதைகள் இந்தி...

சங்க இலக்கியக் களஞ்சியம்

படம்
சங்க இலக்கியக் களஞ்சியம் - தமிழ்மண் பதிப்பகம் வெளியீடு. இருபது தொகுதிகள்.  

தொல்காப்பியம் – அறிமுகம் பகுதி -1

  இலக்கணம்   இலக்கணம் என்பது என்ன என்ற கேள்வியை எழுப்பினோம் என்றால் , பதினேழாம் நூற்றாண்டில் ரிச்சலியால் நிறுவப்பட்ட பிரெஞ்சு அகாதமி 1932-   இல் வெளியிட்டுள்ள இலக்கணம் என்பதற்கான விளக்கத்தை இலக்கணவியல் நூலில் பேராசிரியர் சு . இராசராம் எடுத்துக்காட்டியிருப்பார் . இலக்கணம் என்பது ஒரு மொழியைச் சரியாகப் பேசவும் எழுதவும் பயன்படும் கலை . மொழிக் கூறுகளுக்கிடையேயுள்ள உறவுகளைக் கண்டுபிடிப்பது இதன் நோக்கம் . இவ்வுறவுகள் இயற்கையானதாகவோ மரபுவழிப்பட்டதாகவோ இருக்கலாம் . இலக்கணக் கலைஞனின் கடமை இம்மொழியின் சரியான பயன்பட்டை விளக்குவதாகும் . அதாவது தூய்மையான மொழியை எழுதும் புலமை மிக்கோரும் நூலாசிரியரும் பேசும் மொழியை விளக்குவதாகும் . பிறமொழிகளின் ஆதிக்கத்திலிருந்து மொழியை இவர்கள் காக்கின்றனர் . இலக்கணத்தின் விதிகளைப் பொருத்தவரையில் அவை காரண காரிய விளக்கங்களுக்கு உட்பட்டவை . மனித மனத்தின் இயல்பான போக்குகளிலிருந்து வருவிக்கப்பட்டவை அவை . நமக்கு கிடைத்துள்ள முழுமுதல் இலக்கண நூல் தொல்காப்பியமே . ஆசிரியர் தொல்காப்...